உண்மையாக இருக்கனும்னா சில வேளைகளில் ஊமையா இருக்கனும் என இளைய தளபதி விஜய் ‘மாஸ்டர்’ திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வில் பேசியுள்ளார். இளைய தளபதி விஜயின் 64 வது திரைப்படமாக லோகேஸ் கனராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படக் குழுவினரும் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டிருந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் இவ்வாறு கூறியிருந்தார். அவர் மேலும் பேசுகையில்,
வாழ்க்கை நதி போன்றது. அது ஓடும் போது சில இடங்களில் விளக்கு வைத்து வணங்குவார்கள். ஒரு சிலர் பூப் போட்டு வணங்குவார்கள். சிலபேர் கல்லு விட்டு எறிவார்கள். அதுபோலத்தான் நாம் நதி போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்ல வேண்டும்.
ஒரு சில நேரங்களில் உண்மையாக இருக்க வேண்டுமானால் ஊமையாக இருக்க வேண்டும் எனவும் விஜய் மேலும் பேசியிருந்தார்.